தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான காலியிடங்களை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் அப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.
அரசு காலியிடங்கள்:
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது நடப்பாண்டில் 2400 பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்கள் ரேஷன் கடைகளில் இருப்பதாக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது. மாதந்தோறும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு சார்பில் நிவாரண நிதி மற்றும் இலவச மளிகை பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் அரசு விநியோகம் செய்தது.
TNUSRB 2ம் நிலை காவலர் உடற்தகுதித்தேர்வு தொடக்கம் – கொரோனா சான்றிதழ் கட்டாயம்!
அரசின் அனைத்து நலத்திட்டங்களும் பொதுவாக ரேஷன் கடைகளின் மூலமாக தான் அமல்படுத்தப்படுகிறது. இதனால் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது, எப்படி கேள்விக்கு பதிலளிப்பது, கடையின் கணக்குகளை பராமரிப்பது வரும் பிரச்சனைகளை எதிர்கொள்வது போன்ற பணித்திறன் பயிற்சியை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதேபோன்று, தொடர்ந்து ஒரு பணியாளர் ஒரே நியாயவிலைக் கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற அனுமதிக்க கூடாது என்றும், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், விரைவில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும், மாதம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.