அரசு ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியான ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் சூப்பரான தகவல்!!
நாடு முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் குறைக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது நிதி இராஜாங்க அமைச்சர் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சம்பள உயர்வு
உலக நாடுகளில் கொரோனா காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது இயல்பு நிலைக்கு மீண்டு வருகின்றன. ஆனால் இலங்கை நாட்டில் தொடர்ந்து நிதி நெருக்கடி நிலை நிலவி வந்தது. அதனால் நிதி நெருக்கடி நிலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டது. அதன்படி தற்போது ஓரளவுக்கு நிதி நெருக்கடி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
ஆனாலும் தற்போது அரசு ஊழியர்கள் மத்தியில் தங்களுக்கான சம்பளம் குறைக்கப்படும் என அச்சத்தில் உள்ளனர். மேலும் தற்போது வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் அளிக்கப்படுவதில்லை என்றும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் இது தொடர்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியிருப்பதாவது, தற்போது அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவு சுமார் ரூ. 7885 பில்லியனாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள சூப்பர் திட்டம் – இனி யாரும் ஏமாற வேண்டாம்!
இதில் 10 சதவீதம் சமூக நலத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ரூ.1,000 பில்லியனுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதனால் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் குறைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.