தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கை? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது இருமொழிக்கல்விக்கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் அண்ணா வழியில் தமிழ்நாட்டில் இருமொழிக் கல்வி தொடரும் என்று கூறியுள்ளார்.
இருமொழி கொள்கை:
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கை 1968-ம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. சில வருடங்களுக்கு பிறகு அதாவது 1992-ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2016-ம் ஆண்டு டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழு கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது. 21ம் நூற்றாண்டின் முதல் கல்வி கொள்கை இது தான். பள்ளியில் மொத்த சேர்க்க விகிதத்தை 2030-ம் ஆண்டுக்குள் 100 சதவீதமாக மாற்றுவது மற்றும் கல்வியை இடைநிற்றல் செய்த மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதும் ஆகும்.
இந்தியாவில் குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
மேலும் இந்த புதிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இது இந்தி மொழி திணிப்பு என்று பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அதே போல தமிழக அரசும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பிறகு மும்மொழிக் கொள்கை மாற்றம் செய்யப்பட்டு தாய்மொழி அல்லது வட்டார மொழி மற்றும் ஆங்கிலம் பயில வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெரியார் மற்றும் அண்ணா அவர்களின் வழியில் தமிழ்நாட்டில் இருமொழிக் கல்வி கொள்கையே பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இவர் செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவரவர் தாய்மொழியில் படிப்பது அவர்களுடைய விருப்பம் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே முக்கிய கல்வி பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களில் இருமொழி கொள்கை நடைமுறையில் உள்ளதா என்பதை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்