மதுரையில் பிரம்மாண்ட நூலகம் அமைப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிரம்மாண்டமாக கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்.
நூலகம் அமைப்பு:
அறிவை வளர்க்கும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று கூடும் இடம் நூலகம் ஆகும். சொந்தமாக விலை கொடுத்து நூல்களை வாங்கி படிக்க முடியாதவர்கள் நூலகங்களை நாடி செல்கின்றனர். தமிழகம் முழுவதும் ஏராளமான நூலகங்கள் உள்ளது . குறிப்பாக சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் இரண்டாவது பிரம்மாண்ட நூலகமாக திகழ்கிறது. அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி அன்று இதனை நிறுவினார்.
தமிழகம் முழுவதும் ஜூன் 21க்கு பின் ஊரடங்கு தளர்வுகள்? எவை அனுமதிக்கப்படலாம்!
அதே போல தற்போது மதுரை மாவட்டத்தில் கருணாநிதி நினைவு நூலகம் அமைய உள்ளது. சுமார் 2 லட்சம் சதுர அடியில் ரூ.70 கோடி செலவில் இந்த நூலகம் அமைய உள்ளது. மதுரையில் இந்த நூலகம் அமைப்பதற்கு சாதகமான 5 இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். மதுரை மாட்டுத்தாவணி, உலக தமிழ் சங்கம் கட்டிடம், மீனாட்சியம்மன் கோயில், எல்லீஸ் நகர், மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற இடங்களை நேரில் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.
TN Job “FB Group” Join Now
பள்ளி மற்றும் கல்லூரி உயர்கல்வி ஆராய்ச்சி மாணவர்கள், இளைஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் இந்த நூலகம் அமையும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். 5 இடங்கள் பற்றியும் முதலமைச்சருக்கு அறிக்கையாக கொடுக்க உள்ளோம். இறுதி முடிவை முதல்வர் ஸ்டாலின் எடுத்து இடத்தை தேர்வு செய்வார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.