தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வூதியம் – அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கடந்த 2ம் தேதி அன்று வழங்கப்பட்டு விட்டதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை:
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பொது போக்குவரத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஆட்சியில் ஓய்வூதியம் வழங்கல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
TN Job “FB Group” Join Now
அவர்களின் கோரிக்கையை ஏற்று தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஓய்வூதியத்திற்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கு முதற்கட்டமாக 6 ஊழியர்களுக்கு நிலுவை தொகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து தற்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு – காவல்துறை வெளியீடு!!
அதன்படி போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான நிலுவை தொகை கடந்த 2ம் தேதி அன்று வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி அன்று 2457 ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ரூ.497 கோடி நிலுவைத் தொகை வழங்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் நகரப் பகுதிகளில் இயங்கும் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளார்.