தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் உச்சம் தொட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற நிலைக்கு மீண்டும் தள்ளப்படுவோமோ என்ற பெரும் அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கிடடதட்ட இரண்டரை ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உருமாறியபடி பல்வேறு பெயர்களில் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. மேலும் மூன்றாவது அலை முடிந்த பின்னர் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இழந்த வாழ்வாதாரங்களை மீட்டெடுக்க முயற்சித்து வரும் நிலையில் நான்காவது அலை தற்போது உருவாகி உள்ளது. மேலும் இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதாவது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், செங்கல்பட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (ஜூலை 4 ) ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்தாலும் கூட 40%திற்கும் அதிகமாக மருத்துவ படுக்கை நிரம்பினாலோ, ஆர் டிபிசி ஆர் பரிசோதனையில் 10 %திற்கு அதிகமாகத் தொற்று பாதிப்பு இருந்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே அந்த நிலையில் தற்போது தமிழகம் இல்லை, அதனால் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அல்லது முழு ஊரடங்கு தேவை இல்லை என கூறியுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.90,000 ஆக உயர்வு – அரசு ஒப்புதல்!
மேலும் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில், பாதிப்புகள் அதிகமாக உள்ளதால், சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,269 கொரோனா கேஸ்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில், முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 90.5 சதவீதம், இரண்டாவது டோஸ் போட்டவர்கள் 74.73 சதவீதம் எனவும் தெரிவித்துள்ளார்.