தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை!
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தலைமை தாங்கி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
ஊதிய ஒப்பந்தம்:
தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட காலமாகவே அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வருடம் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதிகரித்து வரும் விலைவாசியை கருத்தில் கொண்டு கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தியது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த மாதம் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கியது. இதனையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களை போல அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கோவையில் நாளை (மே 13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் அரசுப் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த ஆலோசனை நேற்று நடைபெற்றது. ஏற்கனவே அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது வந்தனர். தற்போது ஊதிய ஒப்பந்தம் குறித்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக்கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைத்தளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Exams Daily Mobile App Download
மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதித்தல், ராமநாதபுரத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்து அதனை விரைவில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தினார். மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள 16 பேருந்து நிலையங்களில் தகவல் பலகை மூலம் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாடு செய்தல் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.