தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பெற்றோர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் அரசு பள்ளிகளை ஏளனமாக நினைக்காமல் தங்களது பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
அரசு பள்ளிகள்:
தமிழக மக்களிடையே அரசு பள்ளி என்றாலே ஒரு ஏளனம் நிலவி வருகிறது. பெரும்பாலானோர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு தனியார் பள்ளிகளையே நாடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஆங்கில மொழியில் பேச்சு பயிற்சி அளிப்பது. இது பெற்றோர்களால் கூறப்படுகிற ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. அடுத்த காரணம் பெஸ்ட் கோச்சிங் வழங்கப்படும். இவை இரண்டு தான் முக்கிய காரணம். அதனால் அதிக பணம் செலுத்தினாலும் பரவாயில்லை என்று எண்ணி தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க நினைக்கிறார்கள்.
வீட்டில் இருந்தே வேலை (WFH) செய்பவர்கள் கவனத்திற்கு – எளிய உடற்பயிற்சிகள்!
அந்த நம்பிக்கையை போக்கும் விதமாக அரசுப் பள்ளிகளில் பல்வேறு விதமான சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. அதாவது கடந்த சில ஆண்டுகளாக பெற்றோர்கள் எதிர்பார்க்கும் ஆங்கில மற்றும் தமிழ் என இரண்டு மீடியம் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கையாக கிண்டர் கார்டன் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தரமான கட்டிடங்கள், சுத்தமான குடிநீர் வசதி, அனைவருக்கும் கழிப்பறை வசதி போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படுகின்றன.மேலும் நீட் கோச்சிங் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!
ஆனாலும் கூட மக்கள் தனியார் பள்ளிகளையே விரும்புகின்றனர். இது குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்று மாற்றிக்காட்ட உழைத்து வருகிறோம் என்று கூறியுள்ளார். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வித்துறையை மேம்படுத்த அயராது உழைத்து கொண்டிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். அதனால் அரசு பள்ளிகளை ஏளனம் செய்யாமல் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.