தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து குடோன்களிலும் code system கொண்டு வரப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை
தமிழகத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தார். அதில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.4000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதி அளித்தபடி 2 தவணைகளாக கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் பேரிடர் காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உதவும் வகையில் இலவச மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
மே 31ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்? அரசு விளக்கம்!
அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் தமிழர் திருநாளை முன்னிட்டு இலவசமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதலில், விநியோகத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் தரம் குறைந்த பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது. இது குறித்து முதல்வரின் உத்தரவின் பேரில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
மேலும் அரிசி கடத்தல் வாகனங்களில் சிக்கியவர்கள் கைது செய்யப்பட்டு தற்போது விட தற்போது அரிசி கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரிசி கடத்தலை தடுப்பதற்கு அதிகாரிகள் தினந்தோறும் பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மாநில எல்லைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு ரேஷன் பொருட்கள் கொண்டு செல்வது கண்காணிக்கப்படுகிறது. சாக்குப் பைகளில் சீல் வைத்து எங்கிருந்து கடத்தப்படுகிறது என்பதை கண்டறிய திட்டமிட்டு உள்ளது. கோதுமைக்கு பதில் அரிசி 22 ஆயிரம் டன் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.