தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசு தடுப்பு நடவடிக்கையாக முதற்கட்டமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி மாதம் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கும், கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பிறகு கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
நடிகர் விஜய்க்கு 1 லட்ச ரூபாய் அபராதம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
தற்போது 2021- 22ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கிய போதிலும், கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்கும் காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பும் நன்கு குறைந்துள்ளது. அதனால் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வியை தொடர்ந்து வருகின்றனர். பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அதே போல் ஆகஸ்ட் மாதம் முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது எனவும் சுகாதார துறையினரிடம் ஆலோசித்து அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.