தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 – அமைச்சர் விளக்கம்!
தமிழ்க அரசு அறிவித்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டடம் குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கம்:
தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் அனைத்து கட்சிகளும் பல தேர்தல் வாக்குறுதிகளையும் தெரிவித்தது. பெண்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் பல திட்டங்களும் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் திமுகவினர் தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000, கொரோனா நிவாரண உதவித்தொகை போன்ற பல திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.
Infosys நிறுவனத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு – புதிய நிதியாண்டில் திட்டம்!
அதேபோல், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதலில் ஐந்து முக்கிய திட்டங்களுக்கு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டார். கொரோனா நிவாரண நிதி வழங்கல், மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட்டது. அதேபோல், மாதம்தோறும் ரூ.1,000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கும் திட்டம் தொடங்குவது தொடர்பாக பல கேள்விகளும் எழுந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடல் வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம் அமைத்து குடும்ப அட்டை வழங்குவது போன்ற பணிகளும் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.