தமிழக அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு வழங்கப்படாததன் காரணம் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதற்கான காரணத்தை நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள் விளக்கி உள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனை சரிசெய்ய அரசு சார்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் ஒன்றாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் நிதி மிச்சமடைந்தது. இது கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் குறையும் நீட் தேர்வு விண்ணப்பங்கள் – மாணவர்களின் எண்ணிக்கை சரிவு!
தற்போது கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தனது ஊழியர்களுக்கு DA உயர்வை அறிவித்து அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2022ம் ஆண்டு முதல் தான் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
ஆன்லைன் மூலம் ‘உழவர் அடையாள அட்டை’ பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது பேசிய நிதியமைச்சர் அவர்கள், தமிழகத்தின் நிதி நிலைமை மந்தமாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க முடியவில்லை என தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்த போது வைத்த கோரிக்கைகளை தற்போது ஆட்சிக்கு வந்த பிறகும் நிறைவேற்ற முடியவில்லை, தற்போதைய நிதி சூழல் தான் காரணம் என கூறியுள்ளார்.