தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் – அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவல் தாக்கத்தில் இருந்து மக்கள் மீண்டு வரும் நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் மாதம் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதனால் கட்டுப்பாடு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பொருளாதாரம் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் பல நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் 2021 ரத்து? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
தமிழக அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து மக்கள் தற்போது மீண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் செப்டம்பர் மாதம் ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கல்யாணமகாதேவி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
இதுவரை தமழிகத்திற்கு 1,16,57,690 தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள் எண்ணிக்கை 1,10,34,760 ஆகும். ஆனால் தற்போது 3,44,342 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. மிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட அனைவருக்கும் இரண்டு தவனை தடுப்பசி போடுவதற்கு 11. 36 கோடி தடுப்பூசி மருந்துகள் தேவை. அதன்படி தற்போது 10.20 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
ஆக்சிஜன் வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனைகளில் 40,000 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் அரசு மருத்துவமனைகள், அனைத்து தனியார் சேவை மையங்கள், சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்பட அனைத்து இடங்களில் 1 லட்சம் படுக்கைகள் தயாராக வைக்க உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் அனைத்து மருத்துவ மனைகளிலும் தனியாக குழந்தைகள் சிகிச்சை பிரிவு,குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.