தமிழக அரசின் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து? – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக அரசின் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து? - அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசின் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து? - அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசின் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து? – அமைச்சர் விளக்கம்!

ஆதார்- மின் இணைப்பு எண் இரண்டையும் இணைப்பது குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மின்வாரிய துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்:

மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் அட்டையுடன், நாட்டு மக்களின் அனைத்து விதமான அடையாள ஆவணங்கள் மற்றும் எண்கள் இணைக்கப்படும் நடவடிக்கை நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மத்திய அரசு அனைவரும் ஆதார் எண்களுடன் TANGEDCO-ன் மின் நுகர்வோர் எண்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை முறைப்படுத்துவதற்காக இந்த இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

Follow our Instagram for more Latest Updates

தமிழகத்திலும், கடந்த சில நாட்களாக இப்பணிகள் நடந்து வருகிறது. ஆனால், அதிக அளவிலான மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு அரசு வழங்கும் இலவச 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது, அவை ரத்து செய்யப்படும் என்று சில வதந்திகள் பரவி வந்தது. இதனால் மக்கள் குழப்பம் அடைந்தனர்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இனி குரூப் மெசேஜில் இருந்து தப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், ஒருவர் 5 மின் இணைப்புகளை வைத்திருந்தாலும் அவர் இலவசமாக வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக, தற்போது வரை தமிழகத்தில் 15 லட்சம் பேர் ஆதார் எண்களை இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!