தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடக்கம்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை மீண்டும் தொடங்கி விட்டதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அது குறித்து தற்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்து உள்ளார்
அமைச்சர் விளக்கம்!
கொரோனா வைரஸ் தொற்று பரவியதால் கடந்த ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் முடங்கியது. அதன் தாக்கத்தில் இருந்து படிப்படியாக நாடு மீண்டு வந்த நிலையில் இந்த ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவ தொடங்கியது. இதனால் மீண்டும் ஊரடங்கு போடப்பட்டது.
தமிழகத்தில் முழுவதுமாக பள்ளிகள் திறப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் தடுப்பூசிகள் அதிக அளவு மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் தடுப்பூசி போடுவதற்கு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தற்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. அதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இனி ‘இது’ கட்டாயம் – தொடக்க கல்வி சுற்றறிக்கை!
அப்போது பேசிய அவர், மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை எனவும் விளக்கமளித்தார். தொடர்ந்து பேசிய அவர், 115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை ஏற்க இயலாது என்றும், அதிமுக ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.