தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் சிகிச்சைக்கு உதவி புரியும் வகையில் கூடுதலாக 7 மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சார சேவை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்தார்.
மின்சார சேவை:
தமிழகத்தில் கடந்த மூன்று மாத காலமாகவே கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் தமிழகம் மிக மோசமான நிலையை சந்தித்தது. அரசு மருத்துவமனைகள் தோறும் ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும் பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்து தமிழகத்தில் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் சில மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சார சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில், இது குறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா பேரிடர் காலத்தில் தடையில்லா மின்சார சேவையை மேலும் 7 மருத்துவமனைகளுக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த வழித்தடங்களில் பழுது ஏற்பட்டால் அடுத்த மூன்று வினாடிகளில் மின்தடத்தில் தானாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஊட்டி கோர்டைட் தொழிற்சாலை மருத்துவமனை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள் !!
7 மருத்துவமனைகள் விவரம்:
ஸ்டான்லியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையம்.
பெரியார் நகர் கொளத்தூர் அரசு மருத்துவமனை.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
சேப்பாக்கம் கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை.
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை.
தாம்பரம் சானடோரியம் டிபி மருத்துவமனை.
சென்னை கே.கே நகர் இஎஸ்ஐ மருத்துவமனை.