தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு – அமைச்சர் அறிவிப்பு!!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் 2020-21ம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் நடைபெறவிருந்தது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டு வந்தது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தேர்வினை தமிழக அரசு தேதி அறிவிக்காமல் ஒத்திவைத்தது.
TN Job “FB Group” Join Now
இதற்கு பின்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜூன் 1) சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. மேலும் பல தரப்பினர் தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
காவலர்கள் பணி நேரத்தில் கைபேசி பயன்படுத்த தடை – மாநில அரசு அதிரடி!!
இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாணவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு முக்கியம் என்று தெரிவித்துள்ளார் என்றும், பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்ட பின்பு முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.