ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – அமைச்சர் அறிவிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் வருகிற ஜூன் மாதம் 21ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் மற்றும் ஹசன் மாவட்ட பொறுப்பாளரும் ஆன கோபாலையா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ளது. மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அடுத்த கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து மாநில வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது, மாநிலத்தில் ஒரே கட்டமாக தளர்வுகள் அளிக்கப்படாமல் 4 முதல் 5 கட்டமாக தளர்வுகள் அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
ஜூன் 14க்கு பின்னர் 8 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில முதல்வர் உத்தரவு!!
மேலும் முதற்கட்ட தளர்வுகளில் அத்தியாவசிய கடைகள் திறப்பு நேரம் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். அதன்படி தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்கும் கடைகள் பிற்பகல் 3 மணி வரை திறக்கவும், பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் விரைவில் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கர்நாடக அமைச்சரும் ஹசன் மாவட்டத்தின் பொறுப்பாளரும் ஆன கோபாலையா அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் 14ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் ஹசன் மாவட்டத்தில் வருகிற 21ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.