புதுச்சேரி அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – முதல்வர் அறிவிப்பு!

0
புதுச்சேரி அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - முதல்வர் அறிவிப்பு!
புதுச்சேரி அரசு காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கூட்டாக அரசு விழாவில் அறிவித்துள்ளனர்.

புதுச்சேரி அரசு:

புதுச்சேரி அரசின் 75-வது சுதந்திர தின திருநாளை முன்னிட்டு அரசு சார்பில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்னும் 75,000 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா பாகூர் கொம்யூனில் உள்ள மணப்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழசை, முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம் உட்பட அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை!

மேலும் அவர்கள் மணப்பட்டு வனத்துறை தோட்டத்தளத்தில் மரக்கன்றுகளை நட்டனர். அப்போது துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், இந்த மரம் நடும் விழா ஆடி பெருக்கு நாளான இன்று நடைபெற வேண்டும் என விரும்பினேன். இந்த நாளில் விதை விதைத்தால் நன்றாக விளையும். ஆடிப்பெருக்கில் மரம் நட்டுள்ளோம். காலியிடங்களில் மரம் நடுவதுடன், காலிப்பணியிடங்களை நிரப்புவோம். நான் தெலங்கானா ஆளுநராக இருந்தபோது, கூடுதல் பொறுப்பாக இங்கு புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டது, ஆண்டவரும், ஆண்டு வருபவரும் தந்த மிகப்பெரிய வாய்ப்பு என அவர் தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறுகையில், புதுச்சேரி முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என நமது ஆளுநர் விருப்பப்படுகிறார். தெலங்கானாவை அடிக்கடி சுட்டிக்காட்டுவார். அங்குபோல் புதுச்சேரியை பசுமையாக்க விரும்புகிறார். வறட்சியாக ஏன் புதுச்சேரி இருக்கிறது என்றும், பராமரிப்பில்லை என்றும் அடிக்கடி தெரிவித்து வருகிறார். எனவே புதுச்சேரியை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டுள்ளோம். விரைவில் புதுச்சேரியை சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு துறைகளில் 10 ஆயிரத்திற்கு மேல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் உள்ளனர். எனவே விரைந்து இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத தனியார் தொழிற்சாலைகள் வர சுமுகமான நல்ல சூழலை அரசு உருவாக்கும். அதற்கான முயற்சியை எடுப்போம். தொழில் வல்லுநர்களை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்போம். சிறந்த மாநிலமாக புதுச்சேரியை கொண்டு வர ஆளுநர் விருப்பப்படுகிறார். அதனால் ஆளுநரின் விருப்பப்படி புதுச்சேரியை சிறந்த மாநிலமாக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!