தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – அமைச்சர் தகவல்!
கொரோனா தடுப்பு பணிகளில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியினை 62% பேர் செலுத்திக்கொண்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தடுப்பூசி:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின் கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா 3ம் அலை பரவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை – அரசு கல்லூரியை புறக்கணிக்கும் அரசு பள்ளி மாணவர்கள்!
இது குறித்து மக்கள் நல்வாழ்த்துறை துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் 4ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 20 ஆயிரம் முகாம்கள் என்ற இலக்கை கடந்து 24,882 முகாம்களில் நடத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 2ம் கட்ட தடுப்பூசி முகாமில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 3ம் கட்ட முகாமில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர், 4ம் கட்ட தடுப்பூசி முகாமில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் அலுவலர்களுடன் கலந்து பேசி அடுத்த முகாம் குறித்த தகவல் அறிவிக்கப்படும்.
தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் – பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 62 சதவீதம் பேர். உதகையில் 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் முழுமையாக தடுப்பூசி செலுத்தபட்டிருக்கிறது. புதுக்கோட்டையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நீலகிரியை பொறுத்தவரை முதன் முதலில் ஒட்டுமொத்த பழங்குடியினருக்கும் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.