தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை!
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை!

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் தொந்தரவு தந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்தி விட்டு, பின் பாடங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை அறிவிப்பு:

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாணவர்களின் நலனுக்காக சிறப்பாக செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில், மாணவர்கள் ஆசிரியரிடம் தவறாக நடந்து கொண்ட விதம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலை தளத்தில் வெளியாகி வைரலானது. அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் இத்தகைய நடவடிக்கை, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் அரசுக்கும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி!

இந்நிலையில் ஏற்கனவே சேட்டைகளில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், மாற்றுச் சான்றிதழ் (TC), நடத்தை சான்றிதழில் (Conduct Certificate) என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

Exams Daily Mobile App Download

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில், இன்று காலை ‘குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கான வளர்ந்து வரும் கல்வி’’ குறித்த கருத்தரங்கை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது, மாணவர்கள் வளர் இளம் பருவத்துக்கு வரும் போது, அவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், கற்றல் இடைவெளி, ஒழுக்கக் குறைபாடு ஆகியவற்றை எப்படி போக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவுக்கு பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள்வது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!