தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்த முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் மாணவர்கள் மத்தியில் பொதுத்தேர்வு குறித்த பயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டுள்ளது. அத்துடன் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த முதல் மற்றும் 2ம் திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே செய்யுங்க!
மேலும் 2ம் திருப்புதல் தேர்வில் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியானதால் மீண்டும் இத்தேர்வு வேறொரு வினாத்தாள் மூலமாக நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது பொதுத்தேர்வு தொடங்க இன்னும் சற்று நாட்களே உள்ளதால் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் பொதுத்தேர்வினை முறைகேடு இன்றி நடத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு குறைவான நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெற்றுள்ளது.
மேலும் நடப்பு கல்வியாண்டு மிகவும் கால தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு தயாராக குறைவான நாட்களே உள்ளன. இந்த நிலையில் தேர்வு குறித்து மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இவர் கூறியதாவது, தமிழக முதல்வர் கூறியது போல மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வுக்கு தயாராக வேண்டும். அத்துடன் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்றும் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.