தமிழக அரசு பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழ்நாட்டில் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க 5 ஆண்டுக்கு ரூ 7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பள்ளி கட்டிடங்கள்:
கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் அரசு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் பரவிய கொரோனா பெருந்தொற்று பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தனியார் பள்ளிகளில் பயின்ற தம் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வந்தனர்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெறுவோர் கவனத்திற்கு – மேல்முறையீடு மனு!
இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசும் மற்ற துறைகளை தொடர்ந்து கல்வி துறையிலும் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறது. இதன் விளைவாகவும் கடந்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தற்போது புதிய திட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் கட்டிடங்களை சீரமைக்க 5 ஆண்டுக்கு ரூ 7000 கோடி நிதி மூலம் 15,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இந்த வருடம் ரூ 1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.