தமிழக அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் நடப்பு கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
தற்போது துவங்கி இருக்கும் புதிய கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். அதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தக திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 8% வரை சம்பள உயர்வு! முழு விவரம் இதோ!
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டில் LKG மற்றும் UKG வகுப்பில் புதிதாக 52 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 93 ஆயிரமாக இருந்தது. இம்மாணவர்களுக்கு பழைய கல்வி முறையை பின்பற்றி பாடங்களை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆரம்ப பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. அந்த வகையில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பிற்பாடு LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு முமுமையாக வகுப்புகள் நடத்தப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளில் 5.34 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதே போல 9 முதல் 12ம் வகுப்பு வரை 9 லட்சம் மாணவர்கள் இணைந்துள்ளனர். தவிர, தனியார் பள்ளிகளிலும் 7 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இப்போது தமிழக அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் அரசுப் பள்ளிகளில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது தான். மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.