தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர்:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நிறுவனங்களும் முடங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் ஆன்லைன் முறையில் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டது. பின்பு கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்ததால் , ஊரடங்கில் சற்று தளர்வுகள் ஏற்பட்டது.
ஜனவரி 31ம் தேதி முதல் பள்ளி & கல்லூரிகள் திறப்பு? மாநில அரசு முடிவு!
இந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நவம்பர் மாதம்,1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவ தொடங்கின. அதனால் மீண்டும் பள்ளிகள் ஜனவரி 31 வரை மூடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
Post Office இல் மாதம் ரூ.2000 சேமிப்பதன் மூலம் ரூ.1.39 லட்சம் பெறலாம் – சிறந்த சேமிப்பு திட்டம்!
இந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது, அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.