திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி!

கொரோனா பரவல் காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருந்தது, தற்போது தாக்கம் குறைந்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து அதிகமான பக்தர்கள் சென்று வருகின்றனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது முக்கிய அறிவிப்பை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஹாப்பி நியூஸ்:

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மால்கள், திரையரங்குகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், புராதன சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. கொரோனா 2வது அலையின் தாக்கம் உச்சம் தொடும் நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது, மேலும் சுகாதாரதுறையின் தீவிர கட்டுப்பாடுகளால் நோய் பரவல் கட்டுக்குள் வந்தன.

Wipro நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 120 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் வருகை நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழுமையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டு உள்ள நிலையில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலும் திறக்கப்பட்டு பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. சுவாமி தரிசனம் செய்ய எவ்வளவு கட்டணம் இருந்தாலும், பக்தர்கள் அந்த கட்டணத்தைச் செலுத்தி தரிசனம் செய்ய தயாராக இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்று வந்த ஆர்ஜித சேவைகளில் இந்த முறை பக்தர்களை திருப்பதி தேவஸ்தானம் அனுமதித்தது. மேலும் தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு வசதியாக தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை ஆவடியில் ஜப்பான் உதவியுடன் ரூ.27 கோடியில் நடைபெறும் அரசு மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்த பின், பேட்டி அளித்த அமைச்சர் ஏ.வ.வேலு சென்னை – திருப்பதி சாலை விரிவாக்கப்பணிகள் விரைவில் நிறைவேற்றப்படும். சென்னை- திருப்பதி சாலையில் பாடி- திருநின்றவூர் வரை விரிவாக்கப் பணியை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!