தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்துள்ள நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து தற்போது ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களுக்கு குறைந்தபட்சமாக ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வலுக்கும் கோரிக்கை:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை நிறுத்தி வைத்தது. இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படியை வழங்கி வருகிறது. இது போன்ற பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே.நகர் பகுதியில் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பணியாளர்கள் பேரவை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தம் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இதில் திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதியில், தங்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் தற்போது ஓய்வு பெற்றுள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!