தமிழகத்தில் ஜன.6 முதல் அமலுக்கு வரும் மினி லாக்டவுன்? அரசுக்கு கோரிக்கை!
ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸின் திடீர் எழுச்சியினால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்துள்ள நிலையில், மினி லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.
மினி லாக்டவுன்
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 ஆயிரத்துக்கு மேல் பதிவு செய்யப்பட்டு வரும் கொரோனா தினசரி பாதிப்புகள் 3ம் அலைக்கான எச்சரிப்புகளை அறிவித்திருக்கிறது கவனிக்கத்தக்கது. கடந்த முறையை போல இல்லாமல் இம்முறை நோய் பரவல் துவங்கிய கால கட்டத்திலேயே பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் தொற்று நடவடிக்கைகள் முடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மினி லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு – தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்!
அந்த வகையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவலை முன்னிட்டு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளுடன் நேற்று (ஜன.4) ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு, கடைகள் திறப்பு நேரம், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (ஜன.5) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மினி லாக்டவுன் விதிப்பது குறித்தும் அரசு முக்கிய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ஒமிக்ரான் வைரஸ் பரவல் மற்ற டெல்டா வைரஸை விட வேகமாக பரவக்கூடியதாக இருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நோயை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மருத்துவமனைகள் அனைத்தும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிமாறுதல் கலந்தாய்வு விதிமுறை!
சென்னையில் பெரிய மருத்துவமனைகளின் இருப்பு, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் குறித்து முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தினசரி 2000 வரை கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதை விட கொரோனா பரவலின் வேகம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் வார இறுதியில் லாக்டவுன், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிப்பு, பேருந்துகள் இயக்கம் குறைப்பு, தியேட்டர்கள், பார்கள், வழிபாட்டு தளங்களை மூடுவது போன்ற மினி லாக்டவுன் அமலுக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.