தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமலுக்கு வரும் புதிய திட்டம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமலுக்கு வரும் புதிய திட்டம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமலுக்கு வரும் புதிய திட்டம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமலுக்கு வரும் புதிய திட்டம்!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது , நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

புதிய திட்டம்:

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று பிரச்சினையின் போது கடந்த 2020ம் ஆண்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு ஏழை குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தை 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு கூடுதல் உணவு தானியங்களை ரேஷன் அட்டை தாரர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ ராகி (கேழ்வரகு), அரிசிக்கு பதிலாக வழங்க பரீட்சார்த்தமான முறையில் நடவடிக்கை எடுத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு , அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி ரேஷன் கடைகளில் கேழ்வரகு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “2018-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் உள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அரிசிக்கு பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!