தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – சிறு தானியங்கள் விற்பனை! அரசாணை வெளியீடு!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் - சிறு தானியங்கள் விற்பனை! அரசாணை வெளியீடு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் - சிறு தானியங்கள் விற்பனை! அரசாணை வெளியீடு!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் – சிறு தானியங்கள் விற்பனை! அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக சிறு தானியங்களை வழங்க உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது.

சிறு தானியங்கள் விற்பனை

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கப்படுகிறது. இதில் அரிசி, சர்க்கரை, கோதுமை, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்கள் குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதன் மூலமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி – Airtel, Jio உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவு!

இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை மலிவான விலையில் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் சிறு தானியங்களை விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு மேலும் வருவாய் கிடைக்கும். அத்துடன் தற்போது தமிழக மக்களிடையே சிறுதானியங்கள் மதிப்பு குறைந்து வருகிறது. அதனால் ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதால் தமிழக மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்க முடியும் என்ற நோக்கத்தோடு இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஜன.29) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் இது தொடர்பாக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் நசிமுதீன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, விவசாயிகளிடம் இருந்து கூட்டுறவு சங்கம் மூலம் சிறுதானியங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். இதில் ராகி, கம்பு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்கள் 500 கிராம் முதல் ஒரு கிலோ வரையிலான பாக்கெட்களாக விற்பனை செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலாவதாக சென்னை மற்றும் கோவையில் நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பு பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!