தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு? அதிர்ச்சியில் பொது மக்கள்!

0
தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு? அதிர்ச்சியில் பொது மக்கள்!
தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு? அதிர்ச்சியில் பொது மக்கள்!
தமிழகத்தில் நாளை முதல் பால் விலை உயர்வு? அதிர்ச்சியில் பொது மக்கள்!

தமிழகத்தில் நாளை முதல் பால் விலை அதிகரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பால் விலை:

நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற காரணங்களால் இந்திய பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி காணப்பட்டது. நாடு முழுவதும் வறுமை, விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற காரணங்களால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பழைய நிலையில் இருந்து மக்கள் மெதுவாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது உணவு பொருட்களின் மீது மத்திய அரசால் விதிக்கப்படும் வாரியால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தினமும் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26 லட்சம் லிட்டர் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. மேலும் மீதமுள்ள பாலை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் தினமும் 16.41 லட்சம் லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இதே போல் தனியார் பால் நிறுவனம் 1.25 கோடி லிட்டர் பாலை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.

சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் – அச்சத்தில் பொதுமக்கள்!

தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தேநீர் கடைகள் மற்றும் வணிகம் சார்ந்த நிறுவனங்கள் அதிகம் தனியார் பாலையே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி தன்னிச்சையாக பால் விலையை உயர்த்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 வரை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதம் ஒரு முறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு தலா ரூ.4 வீதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஸ்ரீனிவாச பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ. 2 வரை உயர்த்தியுள்ளது. இதனை தொடர்ந்து ஹட்சன் நிறுவனம் நாளை முதல் பால், மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களின் இந்த தன்னிச்சையான விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!