MIDS-யில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Administrative Officer பணிக்கான இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்று (02.05.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை மிக எளிமையாக இந்த பதிவில் தரப்பட்டுள்ளது.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு விவரங்கள் 2022:
Administrative Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனம் / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறைகளில் 15 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60 வயது முதல் அதிகபட்சம் 62 வயது வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும். இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
Administrative Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இன்று (02.05.2022) இப்பணிக்கான கடைசி நாள், எனவே விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.