தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு – சத்துணவு வழங்க ஏற்பாடு!

0
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு - சத்துணவு வழங்க ஏற்பாடு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு - சத்துணவு வழங்க ஏற்பாடு!
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.1 பள்ளிகள் திறப்பு – சத்துணவு வழங்க ஏற்பாடு!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 91,713 பேருக்கு சத்துணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சத்துணவு ஏற்பாடு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி செப்.1ம் தேதி முதல் 9 – 12ம் வகுப்பு மாணவர்ளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வகுப்புகளில் முழுமையாக பாடங்களை நடத்த முடியவில்லை என்று கூறியுள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை முழுமையாக தயார்படுத்த முடியவில்லை. அதனால் முழுநேர வகுப்பிற்கும், தினசரி வகுப்புகளுக்கும் அனுமதி அளிக்குமாறு ஆசிரியர்கள் அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் இடமாற்றம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக தொடக்கப் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. பின்னர் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் நவ-1 ம் தேதி தொடக்க & நடுநிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பல்வேறு தரப்பினரும் சந்தேகத்திற்கு இடமாக பார்க்கும் போது கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக நவ-1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். இந்நிலையில் தற்போது பள்ளிகள் அனைத்திலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து சத்துணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை: கிடுகிடுவென உயரும் ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!

நவம்பரில் தொடக்கப் பள்ளிகள் திறக்க உள்ளதால் சத்துணவு வழங்க தேவையான பொருட்களை சத்துணவு மைய பொறுப்பாளர்கள் நுகர்வோர் வாணிப கழகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தேவையான பொருட்கள் மற்றும் முட்டை போன்றவை இருப்பில் வைத்திருக்க வேண்டும். சத்துணவில் சுண்டல் மற்றும் பாசிப்பயறு வழங்கப்படுகிறது. தற்போது நுகர்வோர் வாணிப வளாகத்தில் தரமற்ற சுண்டல் மற்றும் பாசிப்பயறு இருப்பதால் மறு அறிவிப்பு வரும் வரை அதை கொள்முதல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 91 ஆயிரத்து 713 மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!