மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CEO சத்யா நாதெல்லா மகன் ஜைன் உயிரிழப்பு – ஊழியர்கள் இரங்கல்!
அமெரிக்க பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட்டின் CEO பதவியை வகித்து வரும் சத்ய நாராயண நாதெல்லாவின் மகன் ஜைன் தற்போது உயிரிழந்திருப்பதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உயிரிழப்பு சம்பவம்
இந்தியாவை சேர்ந்த அமெரிக்க வணிக நிர்வாகியான சத்ய நாராயண நாதெல்லா தற்போது மைக்ரோசாப்டின் நிர்வாகத் தலைமை (CEO) பொறுப்பை வகித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டு வரை CEO பொறுப்பை வகித்து வந்த ஸ்டீவ் பால்மருக்குப் பிறகு 2014 முதல் மைக்ரோசாப்டின் CEO பதவியை வகித்து வரும் சத்ய நாராயண நாதெல்லா மைக்ரோசாப்டின் கிளவுட் மற்றும் எண்டர்பிரைஸ் குழுமத்தின் நிர்வாக துணைத் தலைவராகவும், இந்நிறுவனத்தின் கம்ப்யூட்டிங் தளங்களை உருவாக்குவதற்கும் இயக்குவதற்கும் பொறுப்பாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இது தவிர மாற்றுத்திறனாளி பயனர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக தயாரிப்புகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்திய நாதெல்லா, குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மூளை ஆராய்ச்சி மையத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டார். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் CEO சத்ய நாராயண நாதெல்லாவின் மகன் ஜைன் (26) தற்போது உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிறக்கும் போதே பெருமூளைவாத நோயால் பாதிக்கபட்ட ஜைன் நாதெல்லா பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று (மார்ச்.1) உயிரிழந்ததாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இந்த செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தெரிவித்து இருக்கிறது. மேலும், ஊழியர்கள் அனைவரும் நாதெல்லா குடும்பத்தினரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு இடமளிக்குமாறும், பிரார்த்தனைகளில் அவர்களை நினைவு கூற வேண்டும் என்றும் அந்த மெயில் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.