20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ‘மெட்டி ஒலி’ பிரபலங்கள் – இணையத்தில் வைரல்!
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்துள்ள நடிகர்கள், நடிகைகள் தற்போது மீண்டுமாக இணைந்துள்ள போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
மெட்டி ஒலி தொடர்
முன்பெல்லாம் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு தொடர்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு. அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஒளிபரப்பான ஒரு தொடர் ‘மெட்டி ஒலி’. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்திருந்தது. ஒரு குடும்பத்தில் உள்ள 5 பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த மெட்டி ஒலி தொடரின் கதைக்களம்.
தமிழக அரசு வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கால அவகாசம் – கோரிக்கை!
இந்த தொடர் சுமார் 811 எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டது. இதில் சின்னத்திரை நடிகர்களான டெல்லி குமார், காவேரி, காயத்திரி, வனஜா, உமா, சேத்தன், போஸ் வெங்கட், நீலிமா ராணி, திருமுருகன், சாந்தி வில்லியம்ஸ் மற்றும் தீபா வெங்கட் ஆகிய முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர். இயக்குனர் திருமுருகன் இந்த தொடரை இயக்கி இருந்தார்.
TN Job “FB Group” Join Now
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான இந்த தொடரில் நடித்திருந்த நடிகர்கள், நடிகைகள் தற்போது மீண்டுமாக இணைந்துள்ளனர். அதாவது ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்துள்ள பலர் தற்போது மீண்டுமாக ஒரு தொடரில் இணைந்து நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் மெட்டி ஒலி பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் பழைய நினைவுகளை மீண்டுமாக தூண்டியுள்ளது.