ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் – மெட்டா நிறுவனம் அதிரடி முடிவு!!
முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டா ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு நிதி நெருக்கடி காரணமாக சொல்லப்பட்டுள்ளது.
பணிநீக்கம் அறிவிப்பு
கடந்த ஆண்டு இறுதி முதல் தற்போது வரை காணப்பட்டு வரும் பொருளாதார, நிதி நெருக்கடி சூழலுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், இதுவரை லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில், முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டா கடந்த ஆண்டில் சுமார் 13 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. இந்த பணிநீக்க நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
Follow our Twitter Page for More Latest News Updates
தமிழகத்தில் 1 யூனிட் மின்சாரம் ரூ .8. 50க்கு டெண்டர் – அமைச்சர் தகவல்!
அந்த வகையில், மீண்டுமாக மெட்டா நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இம்முறை மெட்டா நிறுவனத்தின் பணிநீக்கம் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 7 ஆயிரம் அல்லது அதற்கு மேல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நிறுவனத்தில் காணப்படும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த பணிநீக்கம் ஏற்படுத்தப்பட இருப்பதாக மெட்டா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.