சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – 6 நிமிட இடைவெளியில் இயக்கம்!

0
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு - 6 நிமிட இடைவெளியில் இயக்கம்!
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு - 6 நிமிட இடைவெளியில் இயக்கம்!
சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு – 6 நிமிட இடைவெளியில் இயக்கம்!

சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சேவை சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சில வழித்தடங்களில் ரயில்கள் இயங்கும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மெட்ரோ ரயில்:

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தினந்தோறும் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் 2 – ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கம் அதிரடி சரிவு – குஷியில் நகைப்பிரியர்கள்!! இன்றைய நிலவரம் என்ன?

Follow our Instagram for more Latest Updates

இந்த நிலையில் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் மற்றும் கோயம்பேடு வழியாக செல்லும் மெட்ரோ ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிற வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன் படி விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். மேலும் சென்ட்ரல் முதல் பரங்கிமலை நிலையம் வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!