ஞாயிறுதோறும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை – நாளை முதல் அமல்!
தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிறுதோறும் இனி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 9 மணி வரை இருந்த மெட்ரோ ரயில் நேரம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்கள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் முக்கிய சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. அதனால் ரயில்வே நிறுவனம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் அரசு பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் போன்றோர்க்காக மட்டுமே பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டது. மற்ற ரயில்களை தொடர்ந்து சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பரவும் அச்சத்தால் மக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர்.
கண்ணன் காதலை ஏற்க மறுக்கும் முல்லை, ஐஸ்வர்யாவை மிரட்டும் பிரசாந்த் – இன்றைய எபிசோட்!
இந்த நிலையில் தற்போது அரசின் சீரிய முயற்சியால் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதனால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கியுள்ளது. 50 % பயணிகளுடன் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த சில தினங்களுக்கு முன்பு வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு வெளியானது. தற்போது மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டு ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களிலும் இனி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.