தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மெட்ரோ ரயில் சேவை துவக்கம்!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் சென்னை மாவட்டத்தில் மீண்டும் மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் துவங்கியுள்ளது. 50 சதவீத பயணியர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை எதிர்பாராத அளவு பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் மிக பெரும் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்கிறது. மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கும் அமலில் உள்ளது.
தமிழகத்தில் ஜூன் 24 வரை காவலர்களுக்கு விடுமுறை கிடையாது – டிஜிபி அலுவலகம் உத்தரவு!
இதன் காரணமாக தொற்று பரவல் சற்று குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 35,000 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 15,000 ஆக குறைந்துள்ளது. இதனால் அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக ஊரடங்கால் கடந்த மாதம் 10ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவை நேற்று தலைநகர் சென்னையில் மீண்டும் தொடங்கியது.
TN Job “FB Group” Join Now
சென்னை விமான நிலையம், விம்கோ நகர், பரங்கிமலை, எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ நிலையங்கள் ஆகிய இடங்களில் வழக்கம் போல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. ரயிலில் 50 சதவீத பயணியர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்புடன் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் பயணியர் வருகை படிப்படியாக அதிகரிக்கும் மேலும் ரயில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அவற்றின் நேரம் நீட்டிக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் இயக்க பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.