தமிழகத்தில் விடுமுறை நாட்களில் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை – நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில்:
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து வீரியம் இழந்து காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மே 10ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தடை செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதன்படி 50% பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மறு உத்தரவு வரும் வரை ஜூன் 27 முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களில் ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் கடந்த ஜூன் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் ரயில்களில் முகக்கவசம் அணியாதவர்கள், முறையாக முகக்கவசம் அணியாதவர்கள் என மொத்தம் 13 பயணிகளிடம் இருந்து ரூ.2,600 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே பயணிகள் அனைவரும் முறையாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.