மதுரையில் கூடிய விரைவில் மெட்ரோ ரயில் திட்டம்? அரசு தரப்பு விளக்கம்!
மதுரையில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்வதால் விரைவில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், எந்த இடத்தில் மெட்ரோ ரயில் துவங்க இருக்கிறது என்பதற்குரிய தகவலும் வெளியாகியுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம்:
தமிழகத்தில் அதிகமான கோவில்களை கொண்ட சிறப்பு ஆன்மீக தலமாக மதுரை விளங்கி வருகிறது. 148 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மதுரை மாநகரில் கிட்டதட்ட 22 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மதுரையை மாவட்டமாக கொண்ட திருமங்கலம், மேலூர், பெருங்குடி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. இதனால் மதுரையில் வாகன போக்குவரத்தும் பெருகி கொண்டே செல்கிறது. எனவே, வாகன போக்குவரத்து நெருக்கடியையும் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மதுரையில் மெட்ரோ ரயில்திட்டம் அமல்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில்திட்டத்தை உருவாக்குவதற்கான சோதனையில் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மேலும், மதுரையில் கூடிய விரைவிலேயே மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, பிரைவேட் லிமிட்டெட் நிறுவனம் செய்த சோதனையின் படி மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக விநியோகத்தில் முறைகேடு? அமைச்சர் ஆலோசனை!
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநர்கள் கலந்துகொண்டு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்துள்ளனர். அதாவது மெட்ரோ ரயில் மாட்டுத்தாவணியில் துவங்கி கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் பஸ் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க்டவுன், நத்தம் ரோட்டில், மகாலெட்சுமி நகர், மூன்றுமாவடி வழியாக மாட்டுத்தாவணியை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்து திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.