மெட்ரோ ரயில் பயணிகளே இனி வரிசையில் நிற்க தேவையில்லை – புதிய அம்சம் அறிமுகம்!

0
மெட்ரோ ரயில் பயணிகளே இனி வரிசையில் நிற்க தேவையில்லை - புதிய அம்சம் அறிமுகம்!
மெட்ரோ ரயில் பயணிகளே இனி வரிசையில் நிற்க தேவையில்லை - புதிய அம்சம் அறிமுகம்!
மெட்ரோ ரயில் பயணிகளே இனி வரிசையில் நிற்க தேவையில்லை – புதிய அம்சம் அறிமுகம்!

சென்னை மெட்ரோ ரயிலில் செல்வதற்கு டிக்கெட் வாங்க இனி வரிசைகளில் நிற்க தேவையில்லை, QR மட்டும் போதும் என்ற புதிய நடைமுறையை சென்னை மெட்ரோ ரயில்‌ நிறுவனம் இன்று (ஆக. 3) அறிமுகப்படுத்தியுள்ளது.

மெட்ரோ ரயில் :

“இனி வரிசைகள்‌ இல்லை, QR மட்டுமே” என்ற புத்தம்‌ புதிய முறையை சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பயணிகளின்‌ வசதிகளை மேம்படுத்தும்‌ வகையில்‌, மெட்ரோ இரயிலில்‌ பயணிக்க பயணிகள்‌ மெட்ரோ இரயில்‌ நிலையங்களில்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ள க்யூ.ஆர்‌ (QR) குறியீட்டை மட்டும்‌ ஸ்கேன்‌ செய்தால்‌ போதுமானது. இந்த க்யூ.ஆர்‌ (QR) குறியீட்டை ஸ்கேன்‌ செய்வது மூலம்‌ பயணிகள்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ பயணச்சீட்டு வழங்கும்‌ பக்கத்திற்கு செல்லலாம்‌. இந்த பக்கத்தில்‌, பயணிகள் செல்ல வேண்டிய மெட்ரோ இரயில்‌ நிலையத்தையும்‌, பணம்‌ செலுத்தும்‌ முறையையும்‌ தேர்வு செய்யலாம்‌.

Exams Daily Mobile App Download

யுபி, இணைய வங்கி, கடன்‌ மற்றும்‌ சேமிப்பு வங்கி போன்ற அனைத்து மின்னணு பரிவர்த்தனைகள்‌ மூலம்‌ பயணச்சீட்டு கட்டணத்தைச்‌ செலுத்தலாம்‌. ஆண்ட்ராய்டு கைப்பேசியில்‌ யுபிஐ (UPI )முறையை தேர்வு செய்தால்‌, கைப்பேசியில்‌ ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள அனைத்து யுபிஐ செயலிகளும்‌ வரிசைப்படுத்தப்படும்‌. பயணிகள்‌ இவற்றிலிருந்து ஏதேனும்‌ ஒரு முறையை தேர்வு செய்து கொண்டு அடுத்து பக்கத்திற்கு தொடர்வதற்கு பாதுகாப்பு கடவுச்சொல்லை மட்டும்‌ உள்ளிட வேண்டும்‌.

மெட்ரோ ரயில் விரிவாக்கம் குறித்து முக்கிய அறிவிப்பு – இயக்குனர் தகவல்

க்யூ.ஆர்‌ (QR) டிக்கெட்டுகள்‌ தானாகவே உருவாக்கப்பட்டு கைப்பேசி சாதனங்களில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌. தற்போது மொபைல்‌ க்யூ.ஆர்‌ (QR) டிக்கெட்டில்‌ 20% கட்டண தள்ளுபடியும்‌ வழங்கப்படுகிறது. மேலும், இதை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்தின்‌ மேலாண்மை இயக்குநரான முதன்மை செயலாளர்‌ திரு.எம்‌.ஏ.சித்திக்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனம்‌, மெட்ரோ பயணிகளுக்கு எப்போதும்‌ சிறந்த மற்றும்‌ பாதுகாப்பான பயண அனுபவத்தை மட்டுமே வழங்கி வரும் மற்றும் “இனி வரிசைகள்‌ இல்லை, QR மட்டுமே” என சொல்லி இன்று (03.08.2022) கோயம்பேடு மெட்ரோ இரயில்‌ நிலையத்தில்‌ இம்முறையை அறிமுகம்‌ செய்து வைத்தார்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!