மெட்ரோ நியோ ரயில் திட்டம் சாத்தியக்கூறுகள் ஆய்வு – மத்திய அரசிடம் கோரிக்கை!
மத்திய அரசின் மெட்ரோ நியோ ரயில் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதன் முதல்கட்ட ஆய்வுகளை தொடங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நியோ ரயில்:
நாட்டின் சிறு நகரங்களில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு நடப்பாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, மெட்ரோ லைட், மெட்ரோ நியோ ஆகிய ரயில் சேவைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டது. டயர் மூலம் சாலைகளில் பிரேத்யக வழிப்பாதை, உயரழுத்த மின் கம்பிகள் ஆகியவை அமைக்கப்பட்டு 2 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் இயங்கும் மெட்ரோ நியோ திட்டம் செயல்பாட்டிற்கு ஒரு கி.மீ. க்கு ரூ.71 கோடி செலவாகும் என்று அறியப்பட்டது. இந்த செயல்முறை மிகவும் பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 261 சிறப்பு ரயில்கள் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற இடத்தில் நியோ மெட்ரோ முதன் முதலாக 32 கி.மீ. தூரம் முதல் கட்டமாக அமைக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 2ம் கட்ட நகரங்களான மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற இடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. 1 மணி நேரத்தில் 5000 பயணிகள் வரை உள்ள சிறிய நகரங்களுக்கு நியோ மெட்ரோ சேவை அமைக்க பரீசீலிக்கப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் வர உள்ளதால் மற்ற நகரங்களில் மெட்ரோ நியோ போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தலாம்.
TN Job “FB Group” Join Now
கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸ் நாகர்கோவில் நகரில் மெட்ரோ லைட் ரயில் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கோரிக்கையினை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய கன்னியாகுமரி பகுதியில் மெட்ரோ நியோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.