வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!
நாம் அவசர வேலையாக வெளியில் செல்லும் போது ATM கார்டை எடுக்க மறந்து விட்டாலும், இனி வங்கியின் ATM மையத்தில் சென்று பணத்தை எடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய வசதிகள்:
முன்னொரு காலத்தில் வங்கியில் நமது கணக்கில் உள்ள பணத்தை நாம் எடுப்பதற்கு நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டியதிருக்கும். ஆனால் அதன் பிறகு ATM கார்டு முறை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ATM மையங்களில் நாம் நொடிப்பொழுதில் நமது கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தற்போது, இன்னும் அதிக முன்னேற்றம் அடைந்து பணத்தை கைகளில் எடுக்காமலேயே ஆன்லைன் வழி பரிமாற்றத்தை செய்ய முடியும்.
PM கிசான் பயனர்கள் கவனத்திற்கு – மாதந்தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம்! முழு விவரம் இதோ!
புதிதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டில் உள்ள அனைத்து ATM கார்டு இல்லாமல் யுபிஐ ஐடி மூலம் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வழிமுறையை நாம் பயன்படுத்துவதன் மூலமாக பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், கார்டு ஸ்கிம்மிங் மற்றும் கார்டு குளோனிங் போன்ற முறைகேடுகளும் தடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட சில வங்கிகளில் அமலுக்கு வந்துள்ள இந்த முறையின் பலனாக பணத்தை எடுப்பதற்கு நாம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
Exams Daily Mobile App Download
இதேபோல் டெபிட் கார்டை பயன்படுத்தாமல் ஸ்மார்ட் போன் மூலமாகவும் பணத்தை எடுக்கலாம். இதற்காக வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் செயலியை பயன்படுத்த வேண்டும். எனவே கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறை யுபிஐ வசதியைப் பயன்படுத்துகிறது. இதற்காக நமது வங்கியில் பதிவு செய்து ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான பின் நம்பரை பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் பல்வேறு மோசடிகளும் தடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Good