அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து விட்டதா? எளிய வழிமுறைகள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டு தொலைந்து விட்டதா? எளிய வழிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டு தொலைந்து விட்டதா? எளிய வழிமுறைகள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டு தொலைந்து விட்டதா? எளிய வழிமுறைகள்!

நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உதவுவதற்காக தேசிய உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த கார்டு தொலைந்து விட்டால், புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது தற்போது ஈஸியாகி விட்டது. ஆன்லைனில் எளிமையான முறைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம். .

எளிய விதிமுறைகள்:

ரேஷன் கார்டு என்பது மிக மிக முக்கியமான ஆவணம். அதிலும் தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது ஸ்மார்ட் கார்டாக அதன் வடிவம் மாறிவிட்டது. மேலும் ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திர உணவுப் பொருட்களை வாங்குவது இயலாத ஒன்று. ஒரு குடும்பத்திற்கு ஒரு ரேஷன் கார்டு, அப்ளை செய்த பிறகு முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்கு வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்த பின்னர் ரேஷன் அட்டை வழங்குவார்கள். இதற்கு 6 மாதங்கள் வரை கூட எடுக்கலாம். சில சமயங்களில் சரியான ஆவணங்கள் இணைக்கப்பட வில்லை என்றால் ரிஜக்ட் ஆகவும் வாய்ப்புகள் உண்டு.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த கல்வியாண்டு மே 16 இல் துவக்கம்!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதியோடு முடிந்து விட்ட நிலையில், நிறையப் பேர் இணைக்காமல் இருந்தனர். எனவே அதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ரேஷன் கார்டில் மோசடி நடைபெறுவதைத் தடுக்க ஆதார் இணைப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டை தவறுதலாக தொலைத்து விட்டால், பதற்றம் வேண்டாம் மறுபடியும் புதிய ரேஷன் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.

1. நீங்கள் முதலில் https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும்.

2. உள்ளே சென்றதும் உங்கள் பயனாளர் IDஐ பதிவிட வேண்டும்.

3. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.

4. இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் ஓப்பன் ஆகும்.

5. அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து அதை டவுன்லோடு செய்ய வேண்டும்.

6. இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!