தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டிற்காக பல லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வந்தபடியே உள்ளன. இந்நிலையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய ரேஷன் கார்டுகள்:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய, பாமர மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் கைரேகை பதிவின் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் ரொக்கத்துடன் விருது – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
அடிக்கடி இந்த கைரேகை இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுவிடுகிறது. இதனால் பல மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் வெறும் கையோடு வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் இத்தகைய பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த கைரேகை இயந்திரத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. இந்த கைரேகை இயந்திரம் அடிக்கடி பழுதாவதாலும், வயதானவர்களின் கைரேகை பதியாத காரணத்தினாலும் குடும்பத்தில் 5 வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது புதிதாக ரேஷன் கார்டுகள் மக்களுக்கு வழங்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டிற்காக 15,74,543 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியுடைய விண்ணப்பதாரர்களான 10,92,064 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.