தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை:

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் லேசான மழையும் அவ்வவ்போது கனமழையும் பெய்து வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொட்டி தீர்த்த கனமழையால் அக்னி நட்சத்திர காலத்தை மக்கள் ஓரளவு சமாளித்தனர். நேற்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு , திருப்பூர் தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

TN Job “FB  Group” Join Now

நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை சென்னையில் சுமார் 4மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புறநகர் பகுதிகளான ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம், வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை அறிக்கை தகவல்கள் தெரிவிக்கிறது.

ஐடி நிறுவன ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – வெளியான முக்கிய அறிவிப்பு!

மேலும் ஜூன் 23ம் தேதி வரை தமிழகம் மாற்று புதுச்சேரியில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக்தை தொடர்ந்து தற்போது வட மாநிலங்களில் குறிப்பாக மும்பை, தானேயில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!