தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் சில வாரங்களாக கடும் பனி கொட்டி வந்த நிலையில் மக்கள் எதிர்பாராத வண்ணம் நேற்று பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளக்காடாய் மாறியது. அதனால் பொது மக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PF கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – நாமினி இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!
மழை பாதிப்பு இன்னும் ஐந்து நாட்களுக்கு இருக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று பெய்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர். வெள்ளநீர் பாதித்த பகுதிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட வந்தார். அவர் மோட்டார் பம்பு மூலமாக மழைநீரை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்