தமிழகத்தின் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அசானி புயல்
சித்திரை மாதத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பது வழக்கமே. இதனை தொடர்ந்து தென்மேற்கு பருவமழை எப்போது ஜூன் மாதத்தில் தான் தொடங்கும். ஆனால் இந்த வருடம் அசானி புயலின் காரணமாக மே மாதத்திலேயே தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இப்புயலின் காரணமாக தெற்கு அந்தமான் கடலோர பகுதியில் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழ்நாட்டில் இன்று மற்றும் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மே 13ம் தேதி அன்று மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடலோர பகுதிகளில், ஆந்திர கடற்கரை பகுதி & அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – அரசிதழில் வெளியீடு!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நிறைய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.