இந்தியாவில் ‘இந்த’ மாதம் அதிகமான மழைப்பொழிவு – வானிலை மையம் அறிக்கை!
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 109 சதவிகிதம் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு:
தென்மேற்குப் பருவமழை காரணமாக இந்தியாவின் பல பகுதிகளில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. மேலும், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள வங்கக்கடலில் புயல் சுழற்சி உருவாகவும் வாய்ப்புள்ளதாக அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், மேற்கு-மத்திய மற்றும் அதனையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் சூறாவளி சுழற்சி வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரைக்கும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகும் இந்த சூறாவளி சுழற்சியின் காரணமாக மத்திய மற்றும் வட தீபகற்ப இந்தியாவில் அதிகமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும், மேற்கு மற்றும் தெற்கு உத்தரபிரதேசம் மற்றும் வட-வடமேற்கு பீகாரின் சில பகுதிகளில் இந்த மாதம் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான முக்கிய உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
மேலும், செப்டம்பர் மாதத்தில் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பகுதிகளை தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தாண்டு 167.9 மி.மீ. அளவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு 109 சதவிகிதம் அதிகமாக மழைப்பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்